சிறப்பு பிரார்த்தனை


சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:46 PM GMT)

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

ஆங்கில புத்தாண்டையொட்டி கடையநல்லூர் பண்பொழி சாலையிலுள்ள பெத்தேல் ஏ.ஜி. தேவாலயத்தில் புது வருட ஆராதனை நடைபெற்றது. இதில் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புதுவருட கேக் வெட்டி வழங்கினர். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


Next Story