தஞ்சை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


தஞ்சை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
x

தஞ்சை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தஞ்சாவூர்

புனித ரமலான் நோன்பு நேற்று தொடங்கியதையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ரமலான் நோன்பு

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நேற்றுஅதிகாலை தொடங்கியது.முன்னதாக நேற்றுமுன்தினம் பிறை தென்படாததால் நேற்றுமுன்தினம் மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொலுகை நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 4 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், நீர் பருகாமலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.

தொழுகை

பின்னர் மாலையில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர். இதேபோல் ரெட்டிப்பாளையம் ரோடு, வடக்குவீதி, அய்யங்கடைதெரு, மேலஅலங்கம், சேவப்பநாயக்கன்வாரி, பாலாஜிநகர், மருத்துவக்கல்லூரி முதல்கேட் பகுதி, கீழவாசல் ஆட்டுமந்தை தெரு, பாம்பாட்டித்தெரு, மானம்புச்சாவடி, விசிறிகாரத்தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை ரகுமான்நகர், தென்கீழ் அலங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.


Related Tags :
Next Story