கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சித்திரை மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலிலும் நேற்று சாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் கரையாம்புதூர் கருமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில், கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

காந்தமலை முருகன்

ேமாகனூரில் காந்தமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதலே காந்தமலை முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்தார். இந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மோகனூரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடபழனியாண்டவர்

பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடிஉயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜாசாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் அரசாயிஅம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், நல்லியாம்பாளையத்தில் உள்ள சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story