உலக நன்மைக்காக ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்


உலக நன்மைக்காக ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்
x

உலக நன்மைக்காக ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்புயாகம், பூஜைகள் நடந்தது. அதன்படி சோழவந்தான் வைகை ஆற்று கிழக்கு பகுதியில் அக்ரஹாரத்தில் உள்ள மங்களஆஞ்சநேயர் கோவிலில் வரதராஜ்பண்டிட் தலைமையில் சிறப்புயாகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மங்கள ஆஞ்சநேயருக்கு 21 திரவிய அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வடைமாலை சாத்துதல் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story