திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைப்பு


திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைப்பு
x

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே வருகிற 12-ந் தேதி முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண். 06703) நெல்லையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து ஒரு ரெயில்(வ.எண்.06704) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி மற்றும் பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல, திருச்செந்தூரில் இருந்து மதுரை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.16731 /16732) மற்றும் நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06673 /06678) ஆகியவற்றில் வருகிற 8-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.


Related Tags :
Next Story