தீபாவளிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்


தீபாவளிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கடந்த ஆண்டு சிறப்பு ரெயில்களை இயக்கியது போல் இந்த ஆண்டும் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

ராமநாதபுரம், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதியில் இருந்து சென்னையில் வசித்து வரும் பொதுமக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

சிறப்பு ரெயில்கள்

அதாவது (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ராமேஸ்வரம் வண்டி எண் 06041/06042) சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ரெயில் தடத்தின் வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுகிறோம்.

இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும். கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story