பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்


பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் 28, 29-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் 28, 29-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

அதன்படி விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்தில் இருந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06130) அன்று பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த 2 ரெயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களின் சேவையும் (வண்டி எண்கள் 06690, 06691 மயிலாடுதுறை- விழுப்புரம், விழுப்புரம்-மயிலாடுதுறை ஆகிய இரு ரெயில்களின் இணைப்பு ரெயில்களின் சேவையாக அளிக்கப்படுவதால், மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கும் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம்.

முன்பதிவில்லா ரெயில்

மேலும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06131) விழுப்புரத்தில் இருந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06132) திருவண்ணாமலையில் இருந்து 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.

இந்த இரு ரெயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த இரு ரெயில்களின் சேவையும் (வண்டி எண்கள் 06027, 06028) தாம்பரம்-விழுப்புரம், விழுப்புரம்-தாம்பரம் ஆகிய இரு ரெயில்களின் சேவையாக அளிக்கப்படுவதால், தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்துக்கும் பயணம் செய்வோர் நேரடியாக பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம்.

இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story