பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலூரில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் இரவு 12 மணி 5 நிமிடத்தில் திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 3-ந்தேதி, 31-ந்தேதி, ஆகஸ்டு 31-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 28-ந்தேதி, நவம்பர் 27-ந்தேதி, டிசம்பர் 26-ந்தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும்.

இதேபோல, விழுப்புரத்தில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் காலை 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் பகல் 12.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

விழுப்புரத்தில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 3-ந்தேதி, 31-ந்தேதி, ஆகஸ்டு 31-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 28-ந்தேதி, நவம்பர் 27-ந்தேதி, டிசம்பர் 26-ந்தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு அதேநாள் காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story