சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x

கபிஸ்தலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் சுமதி குணசேகரன் தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ள பணிகள் குறித்தும், நடைபெற்று முடிந்த பணிகள் குறித்தும் ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story