ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டைசேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டைசேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு பக்தர்கள்

உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story