அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடு


அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி (அய்யா வைகுண்டர்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதன்படி காலையில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் உகப்படிப்பு நடந்தது. மதியம் 12 மணியளவில் சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன், உச்சிப்படிப்பு நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்களுக்கு திருநாமம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story