எமனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


எமனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கள மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story