சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வியாழக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சாய்பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சாய்பாபாவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story