புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி     திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்
x

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

தேவநாதசாமி

கடலூரை அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் முழுவதும் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

நீண்ட வரிசையில்

நேற்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும் அதைத் தொடர்ந்து தேவநாத சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் 1,300 பேர் மொட்டை அடித்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புபணியில் இருந்தனர்.


Next Story