அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே தளவாப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல், நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story