அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கோவில்களில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் தா.பழூர் பெரியநாயகி அம்மன் உடனுறை பெரியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் பெரியநாயகி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வீடு தோறும் தீபாராதனை செய்தனர். இடங்கண்ணி திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிந்தாமணி மாரியம்மன் கோவில், காரைக்குறிச்சி காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், தா.பழூர் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், செல்லியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story