முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் தவிட்டுப்பாளையம் அருகே உள்ள நஞ்சைபுகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

1 More update

Next Story