முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே குளத்தூர் சரவணபுர ஆறுமுகபெருமான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் சன்னதி தெரு பாலசுப்பிரமணியர் கோவில், பூட்டை சாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், தேவபாண்டலம் குந்தவேல் முருகர், ராவுத்தநல்லூர் சக்திமலை முருகர் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 More update

Next Story