நவத்திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நவத்திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Oct 2023 12:30 AM IST (Updated: 1 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நவத்திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 9 நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

7-வது ஸ்தலமான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவிந்தா பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். பெருமாளுக்கு தீபாராதனைகள் நடைபெற்றது.

விளக்கு ஏற்றி வழிபாடு

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வந்து தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story