சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி அருகே திருப்பன்கூர் சிவலோகநாத சுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் செய்திருந்தார். இதேபோல் புதுத்துறை தாரனேஸ்வரர் கோவிலில் தாரனேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவில், அன்னப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவன நாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

1 More update

Next Story