மேலமறைக்காடர் கோவிலில் சிறப்பு யாகம்


மேலமறைக்காடர் கோவிலில் சிறப்பு யாகம்
x

மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல மறைக்காடர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதை முன்னிட்டு காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாக பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story