பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று விளையாட்டு போட்டிகள்
x

பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

பெரம்பலூர்

விளையாட்டு போட்டிகள்

பாரதியார் தினம், குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குறு வட்ட அளவிலான தடகள போட்டிகள், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், அணிகளுக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம் காலை 7 மணியளவிலும், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் காலை 9 மணியளவிலும் தனித்தனியாக பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

வாலிபால், கால்பந்து

14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மற்ற தடகள போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 10-ந்தேதி மாணவிகளுக்கும், 12-ந்தேதி மாணவர்களுக்கும் வாலிபால் போட்டி, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டென்னிஸ், கபடி ஆகிய போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணியளவில் நடக்கிறது.

அதே பள்ளியில் வருகிற 16-ந்தேதி மாணவிகளுக்கும், 18-ந்தேதி மாணவர்களுக்கும் ஹேண்ட் பால், கோ-கோ, ஏறிபந்து, ஆக்கி ஆகிய போட்டிகளும் நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.


Next Story