முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீச்சல், கூடைப்பந்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு கபடி, கையுந்து பந்து, இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்), நீச்சல், கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நீச்சல், மேசைப்பந்து போட்டிகளும், பொது பிரிவு ஆண்கள் பெண்களுக்கு மேசைபந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. அதேபோல் 13-ந் தேதி(திங்கள்கிழமை) பள்ளி மாணவிகளுக்கு கபடி, கையுந்து பந்து, இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்), நீச்சல், கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், 14-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து போட்டிகளும், 15-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு இறகு பந்து, கால்பந்து போட்டிகளும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இறகு பந்து போட்டியும் நடைபெறவுள்ளது.

மாற்றுதிறனாளிகளுக்கு

இதைத் தொடர்ந்து 16-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் அனைத்து பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு தடகளம், இறகுபந்து, சிறப்பு கையுந்துபந்து, கபடி, எறிபந்து ஆகிய போட்டிகளும், 17-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வளைகோல்பந்து, கூடைபந்து போட்டிகளும், 21-ந் தேதி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டிகளும், 22-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொது பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு தடகள போட்டிகளும் நடைபெறுகிறது.

பின்னர் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு கிரிக்கெட் (பத்து ஓவர்) போட்டிகளும், 24-ந் தேதி அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் இறகுபந்து, சதுரங்கம், தடகளம், கையுந்துபந்து, கபடி ஆகிய போட்டிகளும், 27-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவு ஆண்களுக்கு சிலம்ப போட்டிகளும், 28-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவிகள் பொது பிரிவு பெண்களுக்கு சிலம்ப போட்டிகள் நடைபெற உள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் போட்டியில் தவறாமல் கலந்து கொண்டு தேர்வுபெற்று மண்டல அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story