விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

நெல்லையில் விளையாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் 37-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் யதீசுவரி சரவணபவப்பிரியா அம்பா, கல்வியியல் கல்லூரி செயலாளர் யதீசுவரி துர்காபிரியா அம்பா, கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். உடற்கல்வியியல் துறை பேராசிரியர் வெயிலுமுத்து ஆண்டு விழா அறிக்கை வாசித்தார். மாணவிகளின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் ஜூலியட் ஹெப்சிபா, செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி சந்தியா நன்றி கூறினார்.

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனுஷா வரவேற்று பேசினார். திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் ரூபா ஹரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவி ஜோதி நன்றி கூறினார்.


Next Story