நாய் கடித்து புள்ளிமான் சாவு


நாய் கடித்து புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வசந்தம் நகர் அருகே சுமார் 2 வயதுடைய பெண் புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் துரத்திச் சென்று புள்ளிமானை கடித்து குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடையநல்லூர் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் அடக்கம் செய்தனர்.

1 More update

Next Story