நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம்


நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம்
x

வந்தவாசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயம் அடைந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே பாதூர் வனப் பகுதியில் இருந்து வெண்மந்தை கிராமத்துக்கு 5-க்கும் மேற்பட்ட மான்கள் தண்ணீர் தேடி வந்தன. அவை அங்குள்ள வயல்வெளியில் சுற்றித்திரிந்தன.

இதனைக் கண்ட நாய்கள் மான்களை கடிக்க துரத்தின. இதில் மான்கள் தப்பியோடியது. அப்போது 2½ வயதுள்ள பெண் புள்ளிமான் மட்டும் நாய்களிடம் சிக்கியது.

இதில் நாய்கள் கடித்ததில் புள்ளிமான் காயமடைந்தது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த புள்ளிமானை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து ஆரணி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஆரணி வனச்சரக அலுவலர் ரவிக்குமார், வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் அபர்ணா ஆகியோர் வந்து புள்ளிமானை மீட்டு, உரிய சிகிச்சை அளித்து பாதூர் வனப்பகுதியில் விட்டனர்.

1 More update

Related Tags :
Next Story