இலங்கை போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்


இலங்கை போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
x

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டு இருந்த இலங்கை போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

ராமநாதபுரம்

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டு இருந்த இலங்கை போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

போதை பொருள் வழக்கு

இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக மரக்கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்த தகவலின் பேரில் அனுரகுமார் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் இலங்கை துறைமுக காவல்நிலைய போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின்(வயது 32) அண்ணன் என்பதும் அவர் பணிபுரிந்த போலீஸ்நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என்று என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் அவரை வழக்கில் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தபோது அதனை அறிந்த போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் தமிழகம் தப்பி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி மண்டபம் துறைமுக போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கோர்ட்டில் ஆஜர்

பிரதீப்குமார் பண்டாராவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். அவர் மீதான வழக்கில் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார்.


Related Tags :
Next Story