ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூ.66 லட்சம் வருவாய்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூ.66 லட்சம் வருவாய்
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூ.66 லட்சம் வருவாய் கிடைத்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.இதில் ரூ.66 லட்சத்து 5 ஆயிரத்து 11 ரொக்கமும், 201 கிராம் தங்கமும், 1,452 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 241-ம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story