எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
x

கோப்புப்படம்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.

அதேபோல, பிளஸ் 1 தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. இதனிடையே 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது. முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை (மே 19 ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது. இதன்படி 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதே தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் சமர்பித்த செல்போன் எண்ணிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story