கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு


கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு
x

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

கரூர்,

பொதுத்தேர்வு நிறைவு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 வகுப்புக்கு கடந்த 5-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 28-ந்தேதி நிறைவு பெற்றது. இதேபோல் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 6 ஆயிரத்து 735 மாணவர்களும், 6 ஆயிரத்து 401 மாணவிகளும் என 13 ஆயிரத்து 136 பேர் 59 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். கடைசி தேர்வாக சமூக அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர்.

மாணவர்கள் மகிழ்ச்சி

மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்து கொண்டனர். தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக துள்ளி குதித்தனர். பின்னர் மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் சிலர் ஓட்டல்களுக்கு சென்று மதியம் உணவு முடித்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.


Next Story