எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில்  91.65 சதவீதம் பேர் தேர்ச்சி
x

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நேற்று மதியம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாகை மாவட்டத்தில் 4,135 மாணவர்களும், 4,150 மாணவிகளும் என மொத்தம் 8,285 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 3,627 மாணவர்களும், 3,966 மாணவிகளும் என மொத்தம் 7,593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.71 சதவீதமும், மாணவிகள் 95.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

91.65 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.65 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.25 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பு தேர்வு 17 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 4 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 15 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 36 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.


Next Story