எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
x

கோப்பு படம்

தினத்தந்தி 16 Nov 2023 1:04 AM GMT (Updated: 16 Nov 2023 4:15 AM GMT)

தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது, தீபாவளி விடுமுறை முடிந்ததும், பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஜே.இ.இ., கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பாதிக்காத வகையில், 3 விதமான பொதுத் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.


Next Story