அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்


அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
x

அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998-ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பஸ்களில் இலவச பயணச் சலுகை பெறலாம். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், 4-வது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்து விபரங்கள் பெறுவதற்கு 04328-275466 என்ற தொலைபேசி எண்ணிற்கு அல்லது 9842489148 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story