மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி


மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
x

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி வாரியர்ஸ் போர்ட்ஸ் கிளப் மற்றும் அரசு கல்லூரி சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சிவகாசி அரசு கல்லூரியில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் முடிந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல்பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை கோவை அணிக்கும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை திண்டுக்கல் அணிக்கும், 3-வது பரிசு ரூ.7,500 கோவை அணிக்கும், 4-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை சென்னை அணிக்கும் கிடைத்தது. பரிசளிப்பு விழாவில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், கவுன்சிலர்கள் சுகன்யா தினேஷ்மாறன், ராஜேஷ், ரவிசங்கர், மகேஸ்வரி கணேசன், இன்ஸ்பெக்டர் மகேந்திரபாண்டியன், வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ரகுபதி, செயலாளர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story