நாளை மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டி


நாளை மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டி
x

அன்னவாசல் அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 48-வது ஆண்டு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஸ்கீட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி போட்டி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் கோப்பை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story