கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி


கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி
x

கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.

கரூர்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று கரூர் மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியது. இதில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் திருச்சி அணியும், பொள்ளாச்சி அணியும் மோதின. இப்போட்டியினை கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகிேயார் தொடங்கி வைத்தனர். இதில் 25-14, 25-23 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி அணி வெற்றி பெற்றது. இப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.


Next Story