மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடக்கம்


மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
x

மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது

திருச்சி

திருச்சியில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியானது டி-20 எனப்படும் 20 ஓவர் போட்டியாக நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் திருச்சி, சென்னை, சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. முன்னதாக மகளிர் கிரிக்கெட் போட்டியை சி.எஸ்.ஐ. திருச்சி-தஞ்சை பேராயர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். வருகிற 7-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.


Next Story