பழமையான கோவில் கலசங்கள் திருட்டு?


பழமையான கோவில் கலசங்கள் திருட்டு?
x

பழமையான கோவில் கலசங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. இதனால் இப்பகுதி மது பிரியர்கள் மது அருந்தும் இடமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த 2 கலசங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.


Next Story