மயிலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மயிலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டனா்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே விளங்கம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அவர் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலின் பின்பக்க கேட் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






