3 ஆடுகள் திருட்டு

பெண்ணாடம் அருகே 3 ஆடுகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 54), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 7 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் கட்டி இருந்தார். பின்னர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 7 ஆடுகளில் 3 ஆடுகளை காணவில்லை. அதனை நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





