பள்ளி உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு; வாலிபர் கைது


பள்ளி உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு; வாலிபர் கைது
x

பள்ளி உரிமையாளர் வீட்டில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மேலப்பாட்டம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரின் வீட்டு மாடி கதவு வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், வீட்டின் பீரோவில் இருந்த சுமார் ரூ.9 ஆயிரத்தை திருடிசென்றுள்ளார். இதுகுறித்து சீனிவாசனின் மகள் சிவசங்கரி பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சீனிவாசனின் பக்கத்து வீட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ஜோதி நாராயணன் (வயது 25) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அதில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளை அடிக்க சீனிவாசன் வீட்டுக்கு சென்ற போது, பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story