சிதம்பரத்தில்டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது


சிதம்பரத்தில்டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
x

சிதம்பரத்தில் டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் புஷ்பராஜ் (வயது 42). லாரி டிரைவர். கடந்த 21-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்தில் சீர்காழி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், புஷ்பராஜை வழிமறித்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து புஷ்பராஜ் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அம்மாபேட்டை தெற்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சிவா மகன் தமிழரசன் (18), எம்.கே.தோட்டத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீராம் (19), முருகன் கோவில் தெரு லோகநாதன் மகன் மாரி என்கிற மாரியப்பன் (26) அகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து , அவர்களிடம் இருந்து ரூ.16,000 மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story