குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்


குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
x

வாணியம்பாடி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் குழந்தை திருமணம் நடக்க உள்ளதாக தாலுகா அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திம்மாம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் உதவியுடன் நேரில் சென்று விசாரித்தனர்.

அப்போது 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்க உள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவீட்டாரிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் 17 வயதாகும் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றம் எனவும், திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள் என எடுத்துக் கூறினர். அதைத்தொடர்ந்து குழந்தை திருமணம் நடத்த மாட்டோம் என இருவீட்டாரும் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.


Next Story