வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:46 PM GMT)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது மணிக்கு சுமார் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு மோகா என பெயரிடப்படும் என தெரிகிறது.


Next Story