தெருக்கூத்து கலைஞர் விஷம் குடித்து தற்கொலை


தெருக்கூத்து கலைஞர் விஷம் குடித்து தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே தெருக்கூத்து கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராமசாமி (வயது 25). தெருக்கூத்து கலைஞர். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் ராமசாமி கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று ராமசாமி ஜி.அரியூர் கிராமத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story