உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை


உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை
x

கரூர் மாநகராட்சி பகுதிகளில் உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்

விழிப்புணர்வு கூட்டம்

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் கறிக்கோழி, மட்டன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளில் சேகாரமாகும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி வாகனங்கள் மூலம் தினமும் அந்த கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே வியாபாரிகள் தினமும் கடைகளில் தேங்கும் கழிவுகளை சாலையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி வாகனத்தில் வருபவர்களிடம் அந்த கழிவுகளை கொடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுபோன்ற கடைகள் நடத்துபவர்கள் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், இதை மீறி உரிய உரிமம் இல்லாமலோ அல்லது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கறிக்கோழி, மட்டன், மீன் வியாபாரிகள் சங்க தலைவர் சதீஷ், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இறைச்சி கடை வியாபாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story