மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

மணிக்கிராமத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மணிக்கிராமம் அரசினர் நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் உத்திராபதி, தமிழ் குமரன், திருமுருகன், காந்திமதி, பரிமளா தேவி, மணிமேகலை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story