பி.எட், எம்.எட். படிப்பு சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு


பி.எட், எம்.எட். படிப்பு சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
x

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பி.எட், எம்.எட். படிப்பு சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2023-2024-ம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைக்கு ஒருசில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.



Next Story