தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லை அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சிங் கல்லூரி மாணவி

சென்னை பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகள் கீதோரின் ஸ்மைலா (வயது 20). இவர் நெல்லையை அடுத்த டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கீதோரின் ஸ்மைலா சக மாணவிகளுடன் விடுதி அறையில் தூங்க சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் நள்ளிரவில் கீதோரின் ஸ்மைலா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண்விழித்த சக மாணவிகள், கீதோரின் ஸ்மைலா தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கீதோரின் ஸ்மைலா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story