விஷம் குடித்து மாணவி தற்கொலை


விஷம் குடித்து மாணவி தற்கொலை
x

விருத்தாசலம் அருகே கல்லூரிக்கு தாமதமாக சென்றதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகள் சீமா (வயது 17). இவர் திட்டக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20-ந்தேதி சீமா கல்லூரிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சீமாவை அவரது தாய் ஜெயலட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சீமா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீமா பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து விஸ்வநாதன் விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு தாமதமாக சென்றததை தாய் கண்டித்தால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story